• Jul 15 2025

தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

Chithra / Jul 15th 2025, 3:27 pm
image

 

தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

அதன்படி, 2020 முதல் 2022 வரை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரையும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை  தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று (15) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.அதன்படி, 2020 முதல் 2022 வரை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரையும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement