• Jun 03 2025

குறைகளை சுட்டிக்காட்டுவதால் என்னை சிக்கவைக்க அரசு முயற்சி; சவால்களை வெற்றிகொள்ள தயார்! - தயாசிறி பகிரங்கம்

Chithra / Jun 2nd 2025, 8:44 am
image

  

என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறை அமைச்சர்,  பிங்கிரிய விளையாட்டு மைதானம் தொடர்பில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 

ஒன்று இவருக்கு விடயம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது பிறிதொருவர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து குறிப்பிட்டிருக்க  வேண்டும்.

பிங்கிரிய விளையாட்டு மைதான நிர்மாணிப்புக்கான பணிகள் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதமளவில் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் செயற்பட்டேன்.

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் 12 மைதானங்களின் நிர்மாண பணிகள் நிறைவுபெறும் நிலையில் காணப்பட்டன.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒருசதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

என்னுடனான அரசியல் முரண்பாடுகளினால் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களுக்காக அபிவிருத்தி கருத்திட்டங்களை இடைநிறுத்தியது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியாத விடயங்களை ஊடகங்கள் மத்தியில் குறிப்பிடுவதற்கு முன்னர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும். 

விலைமனு கோரல் பத்திரங்களை பரிசீலனை செய்ய வேண்டும். ஆகவே  விடயங்களை அறியாமல் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

என்னை திருடன் என்று குறிப்பிட முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். எச்சந்தர்ப்பத்தில்  தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை.என்றார்.

குறைகளை சுட்டிக்காட்டுவதால் என்னை சிக்கவைக்க அரசு முயற்சி; சவால்களை வெற்றிகொள்ள தயார் - தயாசிறி பகிரங்கம்   என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.விளையாட்டுத் துறை அமைச்சர்,  பிங்கிரிய விளையாட்டு மைதானம் தொடர்பில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஒன்று இவருக்கு விடயம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது பிறிதொருவர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து குறிப்பிட்டிருக்க  வேண்டும்.பிங்கிரிய விளையாட்டு மைதான நிர்மாணிப்புக்கான பணிகள் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதமளவில் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் செயற்பட்டேன்.2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் 12 மைதானங்களின் நிர்மாண பணிகள் நிறைவுபெறும் நிலையில் காணப்பட்டன.2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒருசதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.என்னுடனான அரசியல் முரண்பாடுகளினால் பிங்கிரிய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களுக்காக அபிவிருத்தி கருத்திட்டங்களை இடைநிறுத்தியது.விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியாத விடயங்களை ஊடகங்கள் மத்தியில் குறிப்பிடுவதற்கு முன்னர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும். விலைமனு கோரல் பத்திரங்களை பரிசீலனை செய்ய வேண்டும். ஆகவே  விடயங்களை அறியாமல் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.என்னை திருடன் என்று குறிப்பிட முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். எச்சந்தர்ப்பத்தில்  தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement