மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமுள்ள அதிகாரத்தை நிதி அமைச்சின் வசமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ராஜபக்ஷ ஆட்சியில் ஊழலுக்கு பெயர் போன பீ.ஆர். என்ற நபரைப் போன்று தற்போதைய ஆட்சியிலும் ஒரு பீ.ஆர். இருக்கின்றார்.
சுமார் 300க்கும் அதிகமான கொள்கலன்களை அவர் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்துவதோடு, பொறுப்பு கூறவும் வேண்டும்.
ஒருபுறம் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் மறுபுறம் மின் கட்டணத்தை அதிகரித்து அந்த சுமையை மக்கள் சுமத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு அங்கமாக சுயாதீன ஆணைக்குழுவான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகளை புதிய மின்சாரசபை சட்டத்தில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அதற்கமைய மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்தை, நிதி அமைச்சின் வசமாக்குவதற்கான உள்ளடக்கங்கள் குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.
அரசாங்கம் அவ்வாறானதொரு சட்ட மூலத்தை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்திடம் சென்று நியாயம் கோருவதற்கும் பின்வாங்கப் போவதில்லை. என்றார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமுள்ள அதிகாரத்தை நிதி அமைச்சின் வசமாக்க திட்டமிடும் அரசு ; எதிர்க்கட்சி கடும் விசனம் மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமுள்ள அதிகாரத்தை நிதி அமைச்சின் வசமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ராஜபக்ஷ ஆட்சியில் ஊழலுக்கு பெயர் போன பீ.ஆர். என்ற நபரைப் போன்று தற்போதைய ஆட்சியிலும் ஒரு பீ.ஆர். இருக்கின்றார்.சுமார் 300க்கும் அதிகமான கொள்கலன்களை அவர் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்துவதோடு, பொறுப்பு கூறவும் வேண்டும்.ஒருபுறம் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் மறுபுறம் மின் கட்டணத்தை அதிகரித்து அந்த சுமையை மக்கள் சுமத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.அதன் ஒரு அங்கமாக சுயாதீன ஆணைக்குழுவான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகளை புதிய மின்சாரசபை சட்டத்தில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.அதற்கமைய மின் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்தை, நிதி அமைச்சின் வசமாக்குவதற்கான உள்ளடக்கங்கள் குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.அரசாங்கம் அவ்வாறானதொரு சட்ட மூலத்தை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்திடம் சென்று நியாயம் கோருவதற்கும் பின்வாங்கப் போவதில்லை. என்றார்.