• May 30 2025

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்..!

Sharmi / May 29th 2025, 9:08 am
image

அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (29) பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் இவ் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததையும், அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

அத்தோடு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் சேவை வருவதற்காக வந்த போதிலும் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.

எனவே பொதுமக்களின் உடைய அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தோப்பூர் அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிண்ணியா

 கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக, கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததால், அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் சேவை வருவதற்காக வந்த போதிலும் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.

எனவே, பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.




தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பம். அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (29) பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.அந்த வகையில் இவ் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததையும், அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.அத்தோடு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் சேவை வருவதற்காக வந்த போதிலும் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது. எனவே பொதுமக்களின் உடைய அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தோப்பூர் அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.கிண்ணியா கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.இதன் காரணமாக, கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததால், அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் சேவை வருவதற்காக வந்த போதிலும் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.எனவே, பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement