கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு அதன் வாயில் மதுவை ஊற்றி, அதற்கு முத்தம் கொடுத்து நடுரோட்டில் சுற்றிய இளைஞரைக் கண்டு அருகிலிருந்தோர் தெறித்து ஓடிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞனே கழுத்தில் பாம்பைச் சுற்றிக் கொண்டு இந்தியா-தர்மபுரி நான்கு வழிச் சாலை அருகே உள்ள மதுக்கடைக்கு மது வாங்க சென்றுள்ளார்.
முதலில் அந்த பாம்பை பார்த்தவர்கள் இறந்த பாம்பு என நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் சூர்யாவின் கழுத்தில் போட்டிருந்த பாம்பு நெளிந்ததை பார்த்ததும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மது வாங்குவதற்காக அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த இளைஞருக்கு விரைவாக மதுவைக் கொடுத்து ‘உடனே இடத்தை காலி செய்’ என்று அனுப்பி வைத்துள்ளனர்.
மது வாங்கிய இளைஞன் அந்தப் பாட்டிலை தனது வாயால் திறந்து ஆறடி நீளமுள்ள சாரை பாம்பின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார்.
பின்னர் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மீண்டும் மதுவை ஊற்றுவதுமாக சாலையில் அங்கும் இங்கும் நடந்து அட்டகாசம் செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாம்புக்கு 'பீர்' ஊற்றி, முத்தம் கொடுத்த போதை ஆசாமி கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு அதன் வாயில் மதுவை ஊற்றி, அதற்கு முத்தம் கொடுத்து நடுரோட்டில் சுற்றிய இளைஞரைக் கண்டு அருகிலிருந்தோர் தெறித்து ஓடிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞனே கழுத்தில் பாம்பைச் சுற்றிக் கொண்டு இந்தியா-தர்மபுரி நான்கு வழிச் சாலை அருகே உள்ள மதுக்கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். முதலில் அந்த பாம்பை பார்த்தவர்கள் இறந்த பாம்பு என நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ஆனால் சூர்யாவின் கழுத்தில் போட்டிருந்த பாம்பு நெளிந்ததை பார்த்ததும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மது வாங்குவதற்காக அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த இளைஞருக்கு விரைவாக மதுவைக் கொடுத்து ‘உடனே இடத்தை காலி செய்’ என்று அனுப்பி வைத்துள்ளனர். மது வாங்கிய இளைஞன் அந்தப் பாட்டிலை தனது வாயால் திறந்து ஆறடி நீளமுள்ள சாரை பாம்பின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். பின்னர் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மீண்டும் மதுவை ஊற்றுவதுமாக சாலையில் அங்கும் இங்கும் நடந்து அட்டகாசம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.