• May 11 2024

யாழில் வாகன இஞ்சினுக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள்...!இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடி...!samugammedia

Sharmi / Dec 14th 2023, 2:22 pm
image

Advertisement

யாழ் சாவகச்சேரி- கச்சாய் வீதிப் பகுதியில் நேற்றையதினம்(13)பிற்பகல் சாவகச்சேரி இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை மூலமாக 7கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன்-இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சாய் வீதி ஊடாக வடி ரக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு கச்சாய் வீதி-வீரசிங்கம் ஒழுங்கையில் வைத்து கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது வாகன இயந்திர பகுதியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7கிலோ கஞ்சா பொதியை இராணுவ புலனாய்வுப் பிரிவு மீட்டதுடன்-சந்தேக நபர்கள் இருவரையும் பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




யாழில் வாகன இஞ்சினுக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள்.இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடி.samugammedia யாழ் சாவகச்சேரி- கச்சாய் வீதிப் பகுதியில் நேற்றையதினம்(13)பிற்பகல் சாவகச்சேரி இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை மூலமாக 7கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன்-இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கச்சாய் வீதி ஊடாக வடி ரக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு கச்சாய் வீதி-வீரசிங்கம் ஒழுங்கையில் வைத்து கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.இதன்போது வாகன இயந்திர பகுதியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7கிலோ கஞ்சா பொதியை இராணுவ புலனாய்வுப் பிரிவு மீட்டதுடன்-சந்தேக நபர்கள் இருவரையும் பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement