• May 07 2024

பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம்; தொடரும் கைது வேட்டை!

Chithra / Jan 28th 2024, 8:43 am
image

Advertisement

 

தங்காலை - பெலியத்தை பிரதேசத்தில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி - ரத்கம பிரதேசத்தில் வைத்து 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.  

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம்; தொடரும் கைது வேட்டை  தங்காலை - பெலியத்தை பிரதேசத்தில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காலி - ரத்கம பிரதேசத்தில் வைத்து 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.  குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement