• Sep 20 2024

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை! சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Chithra / Aug 12th 2024, 9:04 am
image

Advertisement

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement