• May 13 2026

வட்டிக்குப் பணம் கொடுப்பவரே காலியில் சுட்டுப் படுகொலை! துப்பாக்கிதாரியின் கார் மீட்பு

Chithra / May 13th 2026, 8:09 am
image

காலி, தங்கேதர பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச்  சந்தேகிக்கப்படும் கார், காலி - தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காலி, தங்கேதர பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிதாரிகள், வீதியிலிருந்த நபர் மீது இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று காலி பொலிஸார் தெரிவித்தனர்.


காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.


துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாகக் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


44 வயதுடைய காலி, தங்கேதர பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.


மேற்படி நபர் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மேலும், உயிரிழந்த நபர் ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை நேற்று சம்பவ இடத்துக்குக் காலி நீதிவான் விஜயம் செய்து நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.


துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி -தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இதனையடுத்துப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து குறித்த கார் தொடர்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.


மேலும் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் காலி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 


சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 5 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டிக்குப் பணம் கொடுப்பவரே காலியில் சுட்டுப் படுகொலை துப்பாக்கிதாரியின் கார் மீட்பு காலி, தங்கேதர பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச்  சந்தேகிக்கப்படும் கார், காலி - தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி, தங்கேதர பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிதாரிகள், வீதியிலிருந்த நபர் மீது இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று காலி பொலிஸார் தெரிவித்தனர்.காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாகக் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.44 வயதுடைய காலி, தங்கேதர பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.மேற்படி நபர் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும், உயிரிழந்த நபர் ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை நேற்று சம்பவ இடத்துக்குக் காலி நீதிவான் விஜயம் செய்து நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி -தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்துப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து குறித்த கார் தொடர்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.மேலும் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் காலி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 5 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement