• Oct 03 2024

யாழில் வீட்டுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்- பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆதங்கம்..!

Sharmi / Oct 2nd 2024, 10:43 am
image

Advertisement

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, தன்மீது தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த கிரிதரன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் யாழில் நேற்றையதினம்(01)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பிரச்சனை சிவில் வழக்கு என்பதால், பொலிஸார் நேரடியாகத் தலையிட முடியாது. முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும். 

மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரியமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.

அத்துடன் பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்ப்போது வீடு திரும்பியுள்ளேன்.

பொலிஸாரின் இவ் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், பொலிஸ் மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன். மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது இலஞ்சத்தை பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் அச்சமேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸார் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செயற்படும் விதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சென்றடையும் வகையில் இதனை நான் வெளிக் கொணர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


யாழில் வீட்டுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்- பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆதங்கம். நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, தன்மீது தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த கிரிதரன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் யாழில் நேற்றையதினம்(01)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.குறித்த பிரச்சனை சிவில் வழக்கு என்பதால், பொலிஸார் நேரடியாகத் தலையிட முடியாது. முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரியமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.அத்துடன் பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்ப்போது வீடு திரும்பியுள்ளேன்.பொலிஸாரின் இவ் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், பொலிஸ் மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன். மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது இலஞ்சத்தை பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் அச்சமேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பொலிஸார் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செயற்படும் விதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சென்றடையும் வகையில் இதனை நான் வெளிக் கொணர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement