• Aug 23 2025

ஜனாதிபதிக்கு தனிப்பட்ட பயணம் எதுவும் இல்லை; புலனாய்வாளர்களிடம் விளக்கமளித்த ரணில்!

shanuja / Aug 22nd 2025, 9:50 pm
image

ஒரு ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ பயணம் என்று எதுவும் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். 


ஒரு ஜனாதிபதி எந்தவொரு வருகைக்கும் அரசு நிதியைப் பயன்படுத்தலாம் என்று ரணில் புலனாய்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். 


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணிலை 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். 


அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார். 


அதன்போதே ஒரு ஜனாதிபதி எந்தவொரு வருகைக்கும் அரசு நிதியைப் பயன்படுத்தலாம் என்று ரணில் புலனாய்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.


அதன்பின்னர் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 


நீதிமன்றில் ரணில் சார்பில்  சட்டத்தரணி ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையானார். 


அதன்போது ரணிலின் 2023 லண்டன் பயணத்திற்காக 10 பேருக்கு 16.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும்  முதலில் அதை "தனிப்பட்ட பயணம்" என்று குறிப்பிட்ட ஆவணங்கள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு தனிப்பட்ட பயணம் எதுவும் இல்லை; புலனாய்வாளர்களிடம் விளக்கமளித்த ரணில் ஒரு ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ பயணம் என்று எதுவும் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். ஒரு ஜனாதிபதி எந்தவொரு வருகைக்கும் அரசு நிதியைப் பயன்படுத்தலாம் என்று ரணில் புலனாய்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணிலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார். அதன்போதே ஒரு ஜனாதிபதி எந்தவொரு வருகைக்கும் அரசு நிதியைப் பயன்படுத்தலாம் என்று ரணில் புலனாய்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் ரணில் சார்பில்  சட்டத்தரணி ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையானார். அதன்போது ரணிலின் 2023 லண்டன் பயணத்திற்காக 10 பேருக்கு 16.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும்  முதலில் அதை "தனிப்பட்ட பயணம்" என்று குறிப்பிட்ட ஆவணங்கள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement