• Sep 20 2024

மதுவால் வந்த வினை..! நிலை தடுமாறி மின்கம்பத்துடன் மோதிய முச்சக்கர வண்டி..! இருவருக்கு ஏற்பட்ட கதி

Chithra / Sep 12th 2023, 8:18 am
image

Advertisement

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தோப்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

மதுபோதையில் நால்வர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி நிலை தடுமாறி வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மதுவால் வந்த வினை. நிலை தடுமாறி மின்கம்பத்துடன் மோதிய முச்சக்கர வண்டி. இருவருக்கு ஏற்பட்ட கதி திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் தோப்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மதுபோதையில் நால்வர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி நிலை தடுமாறி வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement