• Jul 01 2024

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை...! இளைஞன் கைது...!

Sharmi / May 30th 2024, 8:22 am
image

Advertisement

யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக நேற்றையதினம்(29) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய தலைமையிலான குழுவினரால் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை இன்றையதினம்(30) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.



யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. இளைஞன் கைது. யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக நேற்றையதினம்(29) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய தலைமையிலான குழுவினரால் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.அதேவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரை இன்றையதினம்(30) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement