• May 19 2024

தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்கு எனது ஆட்சியில் தீர்வு...! சஜித் சூளுரை...!

Sharmi / May 7th 2024, 8:44 am
image

Advertisement

நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எனது ஆட்சியில் வழங்குவேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் தயாராகி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்று சஜித் பிரேமதாசவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில்  வெற்றி பெற்றதும்,  வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் உரிமைகளுக்காக நான் என்றுமே குரல் கொடுத்து வருகின்றேன்

நான் ஜனாதிபதியாக வந்தவுடன் அவர்களுக்கான உரிமைகளை,அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.

இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் என் சேவை தொடரும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்கு எனது ஆட்சியில் தீர்வு. சஜித் சூளுரை. நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எனது ஆட்சியில் வழங்குவேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் தயாராகி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்று சஜித் பிரேமதாசவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில்  வெற்றி பெற்றதும்,  வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் உரிமைகளுக்காக நான் என்றுமே குரல் கொடுத்து வருகின்றேன்நான் ஜனாதிபதியாக வந்தவுடன் அவர்களுக்கான உரிமைகளை,அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் என் சேவை தொடரும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement