• May 08 2024

தொடரும் யுக்திய வேட்டை...! 910 சந்தேகநபர்கள் கைது...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Jan 22nd 2024, 10:07 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில்,  கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய  நடவடிக்கையில்  மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 676 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் 234 சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

65 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 136 கிராம் ஐஸ், 12 கிலோ 600 கிராம் கஞ்சா, 51,146 கஞ்சா செடிகள், 661 கிராம் மாவா, 157 கிராம் மதன மோதகா மற்றும் 254 மாத்திரைகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 676 சந்தேக நபர்களில் 17 சந்தேகநபர்கள் கைது உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

01 சட்டவிரோத சொத்து விசாரணை மற்றும் போதைக்கு அடிமையான இரண்டு சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 19 சந்தேக நபர்களும் அந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.




தொடரும் யுக்திய வேட்டை. 910 சந்தேகநபர்கள் கைது. பொலிஸார் அதிரடி.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில்,  கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய  நடவடிக்கையில்  மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 676 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் 234 சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.65 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 136 கிராம் ஐஸ், 12 கிலோ 600 கிராம் கஞ்சா, 51,146 கஞ்சா செடிகள், 661 கிராம் மாவா, 157 கிராம் மதன மோதகா மற்றும் 254 மாத்திரைகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 676 சந்தேக நபர்களில் 17 சந்தேகநபர்கள் கைது உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.01 சட்டவிரோத சொத்து விசாரணை மற்றும் போதைக்கு அடிமையான இரண்டு சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 19 சந்தேக நபர்களும் அந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement