• May 17 2024

எமது தீர்மானங்கள் சரியென மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது..! - கப்ரால் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 7th 2024, 10:34 am
image

Advertisement

 

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற எமது தீர்மானங்கள் சரியானவையென்று பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் தற்போது வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

படவிளக்கம்

வற்வரி அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டபோது அதனை உள்நாட்டு நிலைமைகள் ஊடாக சீர் செய்ய முடியும் என்ற விடயத்தினை நாம் கடந்த காலங்களில் தொடர்சியாக வலியுறுத்திக் கூறினோம். 

சர்வதேச நாணய நிதியத்திடம் நீடிக்கப்பட்ட கடன்வசதியைப் பெற்றுக்கொள்வதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டியதோடு குறிப்பாக சதாரண மக்களின் அன்றாட வாழ்வாதார நிலைமைகள் நெருக்கடிக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டேன். 

எனினும், அச்சமயத்தில் என்மீதும் அப்போதைய அரசாங்கத்தின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்று குறிப்பிட்டு எனக்கு எதிராக நீதிமன்றத்தைக் கூட நாடியிருந்தார்கள். 

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தினை நாடினார்கள்.

தற்போது மக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது. மக்கள் அன்றாடவாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடிகயில் சிக்கியுள்ளனர்.

இந்த தருணத்தில் பலர் நாம் ஏலவே தெரிவித்த கருத்துக்களும், தீர்மானமும் சரி என்பதை ஏற்றுக்கொள்கின்றது. அதனை பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளும் காலமும் வந்துவிட்டது. என்றார்.

எமது தீர்மானங்கள் சரியென மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. - கப்ரால் வெளியிட்ட தகவல்  சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற எமது தீர்மானங்கள் சரியானவையென்று பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் தற்போது வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.படவிளக்கம்வற்வரி அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டபோது அதனை உள்நாட்டு நிலைமைகள் ஊடாக சீர் செய்ய முடியும் என்ற விடயத்தினை நாம் கடந்த காலங்களில் தொடர்சியாக வலியுறுத்திக் கூறினோம். சர்வதேச நாணய நிதியத்திடம் நீடிக்கப்பட்ட கடன்வசதியைப் பெற்றுக்கொள்வதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டியதோடு குறிப்பாக சதாரண மக்களின் அன்றாட வாழ்வாதார நிலைமைகள் நெருக்கடிக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டேன். எனினும், அச்சமயத்தில் என்மீதும் அப்போதைய அரசாங்கத்தின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்று குறிப்பிட்டு எனக்கு எதிராக நீதிமன்றத்தைக் கூட நாடியிருந்தார்கள். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தினை நாடினார்கள்.தற்போது மக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது. மக்கள் அன்றாடவாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடிகயில் சிக்கியுள்ளனர்.இந்த தருணத்தில் பலர் நாம் ஏலவே தெரிவித்த கருத்துக்களும், தீர்மானமும் சரி என்பதை ஏற்றுக்கொள்கின்றது. அதனை பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளும் காலமும் வந்துவிட்டது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement