• Sep 19 2024

கோயிலுக்குச் சென்று திரும்பியபோது ஏற்பட்ட துயரம் - தடம்புரண்ட முச்சக்கர வண்டி!

Chithra / Sep 15th 2024, 12:33 pm
image

Advertisement


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதில்  முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோமணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.    


கோயிலுக்குச் சென்று திரும்பியபோது ஏற்பட்ட துயரம் - தடம்புரண்ட முச்சக்கர வண்டி திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில்  முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.திருகோமணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.    

Advertisement

Advertisement

Advertisement