• May 03 2024

தந்தை எடுத்த விபரீத முடிவு...! இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழப்பு...!அம்பாறையில் கொடூர சம்பவம்...!

Sharmi / Mar 14th 2024, 1:12 pm
image

Advertisement

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையொருவர் உயிர்மாய்ப்பதற்கு முயன்ற தந்தையொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில்,  மனவளர்ச்சி குன்றிய  தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு  தற்கொலையில் ஈடுபட்ட தந்தை காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த  வெள்ளத்தில் காணப்பட்டது.

குறித்த சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) மற்றும்  முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

அதேவேளை , உயிரிழந்த குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




தந்தை எடுத்த விபரீத முடிவு. இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழப்பு.அம்பாறையில் கொடூர சம்பவம். பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையொருவர் உயிர்மாய்ப்பதற்கு முயன்ற தந்தையொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில்,  மனவளர்ச்சி குன்றிய  தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு  தற்கொலையில் ஈடுபட்ட தந்தை காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த  வெள்ளத்தில் காணப்பட்டது.குறித்த சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) மற்றும்  முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.அதேவேளை , உயிரிழந்த குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement