• Sep 21 2024

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது...! சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு...!

Sharmi / Jun 21st 2024, 12:59 pm
image

Advertisement

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(21)  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் உத்தியோகபூர்வ முதற் பயணமாக இலங்கை வந்து அனைத்து தரப்புக்களையும் சந்தித்துள்ளார்.

தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர் பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை.  மாறாக ஜெயசங்கருடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்காக தவறியதுடன் ஜெயசங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டதுடன் பிறிதொரு கட்சி 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

இலங்கையின் சிங்கள ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழி சமைத்துள்ளது.

சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.

கடந்தகால தமிழர் தரப்பின் இராஜதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி  இலங்கை , இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில்  கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலை எதிர் காலத்தில் எஞ்சியுள்ள தமிழர் இருப்புக்களை யுத்தம் மற்றும் சத்தமற்ற நிலையில் அழித்துவிடும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது. சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு. தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று(21)  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் உத்தியோகபூர்வ முதற் பயணமாக இலங்கை வந்து அனைத்து தரப்புக்களையும் சந்தித்துள்ளார்.தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர் பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை.  மாறாக ஜெயசங்கருடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்காக தவறியதுடன் ஜெயசங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டதுடன் பிறிதொரு கட்சி 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர்.இலங்கையின் சிங்கள ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழி சமைத்துள்ளது. சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.கடந்தகால தமிழர் தரப்பின் இராஜதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி  இலங்கை , இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில்  கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலை எதிர் காலத்தில் எஞ்சியுள்ள தமிழர் இருப்புக்களை யுத்தம் மற்றும் சத்தமற்ற நிலையில் அழித்துவிடும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement