கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை தோண்டும் பணி இன்று திங்கட்கிழமை(09) காலை ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.