• Jun 10 2025

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை.; எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும். - குகதாசன் எம்.பி தெரிவிப்பு..!

shanuja / Jun 9th 2025, 4:02 pm
image

பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை. எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும் என்று திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு இன்று (9)இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,   


வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும்பாண்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளராக சேனுராமன் கருணாநிதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


அத்துடன் சபையின் உறுப்பினர்களாக தமிழரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் வெருகல்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை.எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும். சபைக்கு முக்கியமாக தேவை நிதி ஆகும்.வெருகல் பிரதேச சபை வருமானம் குறைந்த சபையாக காணப்படுகிறது.அரசாங்கத்தின் நிதி கிடைப்பது மிக குறைவாகும்.


வெருகல் பிரதேச சபைக்கு நிதிகளை ஈட்டுவதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் .- என்றார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை.; எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும். - குகதாசன் எம்.பி தெரிவிப்பு. பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை. எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும் என்று திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு இன்று (9)இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,   வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும்பாண்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளராக சேனுராமன் கருணாநிதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சபையின் உறுப்பினர்களாக தமிழரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் வெருகல்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லை.எல்லோரும் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும். சபைக்கு முக்கியமாக தேவை நிதி ஆகும்.வெருகல் பிரதேச சபை வருமானம் குறைந்த சபையாக காணப்படுகிறது.அரசாங்கத்தின் நிதி கிடைப்பது மிக குறைவாகும்.வெருகல் பிரதேச சபைக்கு நிதிகளை ஈட்டுவதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் .- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement