• Sep 21 2024

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்கள் அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும்! காஞ்சன எச்சரிக்கை

Chithra / Aug 7th 2024, 11:13 am
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் அந்த அமைச்சுப் பதவிகளை விட்டு விலக்க நேரிடும் என எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது புதிய விடயம் அல்ல எனவும், இரண்டு வருடங்களுக்கு முன்னர்  கட்சி எடுத்த தீர்மானம் அது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பல துண்டுகளாக பிரிந்து கிடப்பதாகவும், இப்படியே போனால் மிக சொற்பமே மிஞ்சும் என்றும், இனிவரும் காலங்களில் பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியில் இருப்பார் என்றும் கூறினார்.

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்கள் அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும் காஞ்சன எச்சரிக்கை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் அந்த அமைச்சுப் பதவிகளை விட்டு விலக்க நேரிடும் என எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது புதிய விடயம் அல்ல எனவும், இரண்டு வருடங்களுக்கு முன்னர்  கட்சி எடுத்த தீர்மானம் அது எனவும் குறிப்பிட்டுள்ளார்.கட்சி பல துண்டுகளாக பிரிந்து கிடப்பதாகவும், இப்படியே போனால் மிக சொற்பமே மிஞ்சும் என்றும், இனிவரும் காலங்களில் பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியில் இருப்பார் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement