• Oct 07 2024

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு - மஹிந்த அமரவீர விளக்கம்

Chithra / Oct 7th 2024, 8:43 am
image

Advertisement

 


ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அம்பாந்தோட்டையில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.   

நாம் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம். 

அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கூட்டணியில் போட்டியிடவுள்ளோம். 

விரைவில் எமது கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்யும். 

நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் பலப்படுத்தி உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார்.

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு - மஹிந்த அமரவீர விளக்கம்  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.   நாம் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம். அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கூட்டணியில் போட்டியிடவுள்ளோம். விரைவில் எமது கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்யும். நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் பலப்படுத்தி உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement