• Jun 27 2025

இலங்கையிலுள்ள தேவாலயங்களுக்கும் அச்சுறுத்தல் - வத்திக்கான் அரசு இலங்கையிடம் முன்வைக்கவுள்ள கோரிக்கை

Chithra / Jun 26th 2025, 9:37 am
image


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வத்திக்கான் இராஜாங்க செயலாளருடன் நீண்ட கலந்துரையாடல்களை நாம் முன்னெடுத்திருந்தோம். 

அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைகளைக் கோரியிருக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விவகாரம் தொடர்பில் விவாதமொன்றைக் கோரவுள்ளோம்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எந்தவொரு நிபந்தனையும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இந்த அரசாங்கமும் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதை வத்திக்கான் இராஜாங்க செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். 

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் தனது விஜயத்தின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்துவார். 

இவ்வாறானதொரு மீண்டுமொருமுறை எந்தவொரு நாட்டிலும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்துக்கு மத்தியில் சிரியாவில் தேவாலயமொன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இலங்கையிலுள்ள தேவாலயங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற என்ற கோணத்தில் சிந்தித்து, நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பினை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு பேராயரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

இலங்கையிலுள்ள தேவாலயங்களுக்கும் அச்சுறுத்தல் - வத்திக்கான் அரசு இலங்கையிடம் முன்வைக்கவுள்ள கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வத்திக்கான் இராஜாங்க செயலாளருடன் நீண்ட கலந்துரையாடல்களை நாம் முன்னெடுத்திருந்தோம். அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைகளைக் கோரியிருக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விவகாரம் தொடர்பில் விவாதமொன்றைக் கோரவுள்ளோம்.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எந்தவொரு நிபந்தனையும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த அரசாங்கமும் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதை வத்திக்கான் இராஜாங்க செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அவர் தனது விஜயத்தின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்துவார். இவ்வாறானதொரு மீண்டுமொருமுறை எந்தவொரு நாட்டிலும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்துக்கு மத்தியில் சிரியாவில் தேவாலயமொன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே இலங்கையிலுள்ள தேவாலயங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற என்ற கோணத்தில் சிந்தித்து, நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பினை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு பேராயரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement