• Feb 13 2025

புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சி மூடைகளுடன் மூவர் கைது..!

Sharmi / Feb 13th 2025, 11:57 am
image

புத்தளம், கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை காய்ந்த இஞ்சி மூடைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்றுமுன்தினம்(11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான புத்தளம் - தம்பபன்னி நிறுவன கடற்படையினர் கற்பிட்டி -  தளுவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம்(11) இரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.

குறித்த கெப் வண்டியில், 32 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில்  1158 கிலோ 60 கிராம் உலர்ந்த இஞ்சியும், 45 கிலோ கிராம் கருவாடும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல் தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும்,  அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, உலர்ந்த கருவாடு மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சி மூடைகளுடன் மூவர் கைது. புத்தளம், கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை காய்ந்த இஞ்சி மூடைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்றுமுன்தினம்(11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான புத்தளம் - தம்பபன்னி நிறுவன கடற்படையினர் கற்பிட்டி -  தளுவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம்(11) இரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.இதன்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.குறித்த கெப் வண்டியில், 32 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில்  1158 கிலோ 60 கிராம் உலர்ந்த இஞ்சியும், 45 கிலோ கிராம் கருவாடும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல் தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும்,  அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, உலர்ந்த கருவாடு மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement