• Aug 26 2025

குளவி கொட்டி காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் - சிகிச்சையளிக்காததால் நோயாளர்கள் சிரமம்!

shanuja / Aug 25th 2025, 2:21 pm
image

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் நீண்ட நேரம் சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 


இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு  புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

புதுக்குடியிருப்பு  இரணைப்பாலை பகுதியில் உள்ள மூவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 


இன்று (25) காலை  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவருக்கும், அவ் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் அப்பகுதியில் இருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளது. 


உடனடியாக உறவினர்களால் மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  எனினும் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் இருப்பதாக கூறி  நீண்டநேரம்  தங்களைப் பார்வையிடவில்லையென நோயாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 


அத்தோடு இன்னும் பல நோயாளர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற்றுள்ளமையை அவதானிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நீண்ட நேர காத்திருப்பின் பின்னர்  தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பாக இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்களையாவது உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குளவி கொட்டி காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் - சிகிச்சையளிக்காததால் நோயாளர்கள் சிரமம் குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் நீண்ட நேரம் சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு  புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு  இரணைப்பாலை பகுதியில் உள்ள மூவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (25) காலை  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவருக்கும், அவ் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் அப்பகுதியில் இருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளது. உடனடியாக உறவினர்களால் மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  எனினும் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் இருப்பதாக கூறி  நீண்டநேரம்  தங்களைப் பார்வையிடவில்லையென நோயாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அத்தோடு இன்னும் பல நோயாளர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற்றுள்ளமையை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நீண்ட நேர காத்திருப்பின் பின்னர்  தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பாக இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்களையாவது உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement