• Sep 20 2024

தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த மூன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!samugammedia

Chithra / Oct 12th 2023, 4:21 pm
image

Advertisement



கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் நேற்று மதியம் முதல் இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 4 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நீண்ட காலமாக தமக்கு வழங்கப்படாதுள்ள பங்கு இலாபத்தை தோட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த 3 தொழிலாளர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த மூன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள்samugammedia கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.அவர்கள் நேற்று மதியம் முதல் இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 4 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நீண்ட காலமாக தமக்கு வழங்கப்படாதுள்ள பங்கு இலாபத்தை தோட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த 3 தொழிலாளர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், குறித்த தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement