• Oct 16 2024

ஒரு வாரத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள்! இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

Chithra / Oct 16th 2024, 11:21 am
image

Advertisement

புத்தளம் - மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான லூசி பீர்ஸ் மற்றும் 67 வயதான அன்னி பீர்ஸ் ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


ஒரு வார காலப்பகுதியில் மூன்று சகோதரிகளும் உயிரிழந்ததையடுத்து பிள்ளைகளும், உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.


இவர்கள் மூவரும் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கந்ததொடுவாவ கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.


கடந்த வாரம்  சகோதரிகளின் தங்கையான 67 வயதான அனி பீர்ஸ் திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி வயலெட் பெசிர்ஸினும் உயிரிழந்துள்ளார்.


இரண்டு சகோதரிகளின் மரணத்தால் வேதனையடைந்த மற்றுமொரு சகோதரியான 70 வயதான லூசி பீர்ஸ் மூன்று நாட்களுக்கு பின்னர் திடீரென உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்த மூன்று சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே அற்புதமான சகோதர பந்தம் இருந்ததாகவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு வாரத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள் இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் புத்தளம் - மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான லூசி பீர்ஸ் மற்றும் 67 வயதான அன்னி பீர்ஸ் ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.ஒரு வார காலப்பகுதியில் மூன்று சகோதரிகளும் உயிரிழந்ததையடுத்து பிள்ளைகளும், உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.இவர்கள் மூவரும் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கந்ததொடுவாவ கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.கடந்த வாரம்  சகோதரிகளின் தங்கையான 67 வயதான அனி பீர்ஸ் திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி வயலெட் பெசிர்ஸினும் உயிரிழந்துள்ளார்.இரண்டு சகோதரிகளின் மரணத்தால் வேதனையடைந்த மற்றுமொரு சகோதரியான 70 வயதான லூசி பீர்ஸ் மூன்று நாட்களுக்கு பின்னர் திடீரென உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த மூன்று சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே அற்புதமான சகோதர பந்தம் இருந்ததாகவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement