போரில் ரஷ்யா வெற்றிபெறும் பட்சத்தில் அது முழு உலகிற்கும் ஆபத்தாக அமையும் என நேட்டோ பொதுச்செயலார் தெரிவித்துள்ளார்.
கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க், மொஸ்கோ உக்ரைனை கைப்பற்றினால், அது சொந்த பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக அமையும் எனவும், ஆகவே உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு பலியாகி உள்ளது எனக் கூறிய அவர், மேற்குலகம் அதன் தற்காப்புக்கு ஆதரவளிக்கிறது எனவும் கூறினார்.
அதேநேரம் புடின் சமாதானத்திற்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகளை நேட்டோ காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ரஷ்யா வடகொரியா, மற்றும் ஈரானை உதவிக்கு அணுகுவதன் மூலம் போருக்கு தயாராகி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும், ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், முடிவை பரிசீலனை செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.
போரில் ரஷ்யா வெற்றிபெற்றால் அது முழு உலகிற்கும் ஆபத்தாக அமையும் - ஸ்டோல்டன் பெர்க் SamugamMedia போரில் ரஷ்யா வெற்றிபெறும் பட்சத்தில் அது முழு உலகிற்கும் ஆபத்தாக அமையும் என நேட்டோ பொதுச்செயலார் தெரிவித்துள்ளார். கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க், மொஸ்கோ உக்ரைனை கைப்பற்றினால், அது சொந்த பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக அமையும் எனவும், ஆகவே உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு பலியாகி உள்ளது எனக் கூறிய அவர், மேற்குலகம் அதன் தற்காப்புக்கு ஆதரவளிக்கிறது எனவும் கூறினார். அதேநேரம் புடின் சமாதானத்திற்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகளை நேட்டோ காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ரஷ்யா வடகொரியா, மற்றும் ஈரானை உதவிக்கு அணுகுவதன் மூலம் போருக்கு தயாராகி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும், ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், முடிவை பரிசீலனை செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.