• Jun 28 2025

பாதயாத்திரையின் நிறைவில் சோகம் -கதிர்காமத்தில் பக்தர் திடீர் மரணம்!

Thansita / Jun 28th 2025, 1:39 pm
image

கதிர்காமத்தில் பக்தர் ஒருவர் பாதயாத்திரை நிறைவில் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

உடப்பு ஆண்டிமுனை சின்னக்கொலனி பகுதியைச் சேர்ந்த இரத்தினசாமி பொன்னம்பலம் என்பவர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து பக்தர்களுடன் உகந்தமலையிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.

பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்த பின்னர் கதிர்காம வள்ளிமலைக்கு சென்ற வேளையில், நேற்றையதினம் திடீரென அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இதய நோயால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதுவே மரணத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவரின் சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதயாத்திரையின் நிறைவில் சோகம் -கதிர்காமத்தில் பக்தர் திடீர் மரணம் கதிர்காமத்தில் பக்தர் ஒருவர் பாதயாத்திரை நிறைவில் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஉடப்பு ஆண்டிமுனை சின்னக்கொலனி பகுதியைச் சேர்ந்த இரத்தினசாமி பொன்னம்பலம் என்பவர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து பக்தர்களுடன் உகந்தமலையிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்த பின்னர் கதிர்காம வள்ளிமலைக்கு சென்ற வேளையில், நேற்றையதினம் திடீரென அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இவர் இதய நோயால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதுவே மரணத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இவரின் சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement