• Apr 15 2026

மாடியில் இருந்து தவறி விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்; சுன்னாகத்தில் பரிதாபச் சம்பவம்

Chithra / Feb 24th 2026, 8:09 am
image


யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் நேற்றையதினம்  உயிரிழந்துள்ளார். 


சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த 57 வயதுடைய வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


அவர் நேற்றுமுன்தினம் இரவு மாடியில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். 


பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மாடியில் இருந்து தவறி விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்; சுன்னாகத்தில் பரிதாபச் சம்பவம் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் நேற்றையதினம்  உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த 57 வயதுடைய வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அவர் நேற்றுமுன்தினம் இரவு மாடியில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement