வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று(01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலையாகி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
வயலுக்கு சென்ற முதியவருக்கு நேர்ந்த துயரம்: உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று(01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவிக்கின்றனர்.நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலையாகி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.