• Sep 06 2026

சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த சோகம் - யானை தாக்கி பலி

Chithra / Sep 5th 2026, 11:38 am
image


அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.


கெப்பித்திகொள்ளாவ – பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய  செனவிரத்னகே ஸ்ரீ பால மற்றும் 51 வயதுடைய சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், கெப்பித்திகொள்ளாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு சடலங்களையும் பார்வையிட்டுள்ளார்.


இதையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த சோகம் - யானை தாக்கி பலி அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.கெப்பித்திகொள்ளாவ – பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய  செனவிரத்னகே ஸ்ரீ பால மற்றும் 51 வயதுடைய சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், கெப்பித்திகொள்ளாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு சடலங்களையும் பார்வையிட்டுள்ளார்.இதையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement