களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்றுமுன்தினம் (12) பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
21 வயதுடைய இளம் தந்தை, தனது குழந்தையுடன் ரயிலின் முன் குதிக்க முற்பட்டதாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 21 வயதுடைய இளைஞர், அவரது ஒரு வயது கைக்குழந்தை மற்றும் 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இளைஞன் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததையடுத்து, தகவல் அறிந்த அயலவர் அவரைப் பின்தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தந்தையையும் குழந்தையையும் ரயில் நிலைய மேடையில் இருந்து அகற்ற முற்பட்டதாகவும், இதன் போது அவர்கள் அனைவரும் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில், இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமையும், அவரது மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இளைஞர் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதாக குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைக்குழந்தை உட்பட மூவரின் உயிரை பறித்த ரயில் விபத்து - விசாரணையில் திடீர் திருப்பம் களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்றுமுன்தினம் (12) பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.21 வயதுடைய இளம் தந்தை, தனது குழந்தையுடன் ரயிலின் முன் குதிக்க முற்பட்டதாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் 21 வயதுடைய இளைஞர், அவரது ஒரு வயது கைக்குழந்தை மற்றும் 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இளைஞன் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததையடுத்து, தகவல் அறிந்த அயலவர் அவரைப் பின்தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த நபர் தந்தையையும் குழந்தையையும் ரயில் நிலைய மேடையில் இருந்து அகற்ற முற்பட்டதாகவும், இதன் போது அவர்கள் அனைவரும் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விபத்தில், இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமையும், அவரது மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.இந்த நிலையில், இளைஞர் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதாக குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.