• May 09 2026

ஹோட்டலில் சிக்கல்...!வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது திடீர் தாக்குதல்...!samugammedia

Ziya / Jan 17th 2024, 9:32 am
image

கண்டி, ராஜா பிஹில்ல மாவத்தையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்க வந்த போலந்து நாட்டு சுற்றுலா தம்பதிகளை விடுதியின் உரிமையாளர் தாக்கியதாக தம்பதியினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

போலந்து சுற்றுலா தம்பதியை தாக்கிய போது ஹோட்டல் உரிமையாளர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலந்து நாட்டு சுற்றுலா தம்பதியினர் ஆன்லைன் மூலம் ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்ததாகவும், ஆனால் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசதிகள் இல்லாததால் அங்கு தங்க மறுத்ததாகவும் அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளரை கண்டுபிடிக்க கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டலில் சிக்கல்.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது திடீர் தாக்குதல்.samugammedia கண்டி, ராஜா பிஹில்ல மாவத்தையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்க வந்த போலந்து நாட்டு சுற்றுலா தம்பதிகளை விடுதியின் உரிமையாளர் தாக்கியதாக தம்பதியினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  போலந்து சுற்றுலா தம்பதியை தாக்கிய போது ஹோட்டல் உரிமையாளர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.போலந்து நாட்டு சுற்றுலா தம்பதியினர் ஆன்லைன் மூலம் ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்ததாகவும், ஆனால் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசதிகள் இல்லாததால் அங்கு தங்க மறுத்ததாகவும் அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.தம்பதியினரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளரை கண்டுபிடிக்க கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement