அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 12 நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை மாலை கையெழுத்திட்டார்.
சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே உள்ள விசா வைத்திருப்பவர்கள், சில விசா பிரிவுகள் மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் தனிநபர்களுக்கான விதிவிலக்குகளை இந்த பிரகடனம் உள்ளடக்கியது.
அதன்படி ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்வல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளுக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளுக்கு அரை பயண வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் "தீங்கு விளைவிக்க விரும்பும் மக்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" - என்றார்.
மேலும் தொடர்புடைய பட்டியலைத் திருத்தலாம், அந்த பட்டியலில் மேலும் பல நாடுகளைச் சேர்க்கலாம். இந்த நடவடிக்கைகள் ஜூன் (09) முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே திகதிக்கு முன் வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ஏழு முஸ்லிம் நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் ட்ரம்பிற்குப் பிறகு ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2021 ஆம் ஆண்டில் அந்தத் தடையை நீக்க முயற்சித்தார்.
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப். அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 12 நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை மாலை கையெழுத்திட்டார். சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே உள்ள விசா வைத்திருப்பவர்கள், சில விசா பிரிவுகள் மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் தனிநபர்களுக்கான விதிவிலக்குகளை இந்த பிரகடனம் உள்ளடக்கியது.அதன்படி ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்வல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளுக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளுக்கு அரை பயண வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் "தீங்கு விளைவிக்க விரும்பும் மக்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" - என்றார். மேலும் தொடர்புடைய பட்டியலைத் திருத்தலாம், அந்த பட்டியலில் மேலும் பல நாடுகளைச் சேர்க்கலாம். இந்த நடவடிக்கைகள் ஜூன் (09) முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே திகதிக்கு முன் வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ஏழு முஸ்லிம் நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் ட்ரம்பிற்குப் பிறகு ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2021 ஆம் ஆண்டில் அந்தத் தடையை நீக்க முயற்சித்தார்.