• Sep 17 2024

காதல் மயக்கத்தால் சீரழிந்த பாடசாலை மாணவிகள்- காதலன் உள்ளிட்ட இருவர் கைது..!

Sharmi / Aug 22nd 2024, 9:43 am
image

Advertisement

அனுராதபுரம், மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் எனக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் சிறுமிகள் இருவர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லாமல்  உடைகளை மாற்றி வேறு பிரதேசத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, இந்தச் சிறுமிகளில் ஒருவரது காதலன்,  வாகனமொன்றில் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்று இரு சிறுமிகளையும் ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, அந்த வீட்டிலிருந்தவர்கள் சிறுமிகளை வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

பின்னர், சந்தேகநபரான காதலன் இந்தச் சிறுமிகளை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியுள்ளார்.

பின்னர், அந்தக் ஹோட்டலுக்குச் சென்ற காதலனின் நண்பன், காதலனுடன் இணைந்து இந்த இரு சிறுமிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 27 மற்றும் 30 வயதுடைய இருவர் மிகிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


காதல் மயக்கத்தால் சீரழிந்த பாடசாலை மாணவிகள்- காதலன் உள்ளிட்ட இருவர் கைது. அனுராதபுரம், மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் எனக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் சிறுமிகள் இருவர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லாமல்  உடைகளை மாற்றி வேறு பிரதேசத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர்.இதன்போது, இந்தச் சிறுமிகளில் ஒருவரது காதலன்,  வாகனமொன்றில் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்று இரு சிறுமிகளையும் ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இதன்போது, அந்த வீட்டிலிருந்தவர்கள் சிறுமிகளை வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.பின்னர், சந்தேகநபரான காதலன் இந்தச் சிறுமிகளை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியுள்ளார்.பின்னர், அந்தக் ஹோட்டலுக்குச் சென்ற காதலனின் நண்பன், காதலனுடன் இணைந்து இந்த இரு சிறுமிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.குறித்த சம்பவம் தொடர்பில் 27 மற்றும் 30 வயதுடைய இருவர் மிகிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement