• Sep 20 2024

மாணவியை தும்புத்தடியால் கடுமையாகத் தாக்கி வெயிலில் முழந்தாளிடச் செய்த கொடூரம் - இரு ஆசிரியர்கள் கைது!

Chithra / Aug 23rd 2024, 11:57 am
image

Advertisement

 

வென்னப்புவ பகுதியிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.  

குறித்த மாணவியை ஒரு ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன்,

மற்றைய ஆசிரியர் தும்புத்தடியால் தாக்கி, வெயிலில் முழந்தாளிடச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த மாணவி கடந்த 13 நாட்களாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த உரிய விசாரணையின் பிரகாரம் குறித்த ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை தும்புத்தடியால் கடுமையாகத் தாக்கி வெயிலில் முழந்தாளிடச் செய்த கொடூரம் - இரு ஆசிரியர்கள் கைது  வென்னப்புவ பகுதியிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.  குறித்த மாணவியை ஒரு ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன்,மற்றைய ஆசிரியர் தும்புத்தடியால் தாக்கி, வெயிலில் முழந்தாளிடச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மாணவி கடந்த 13 நாட்களாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த உரிய விசாரணையின் பிரகாரம் குறித்த ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement