• Oct 26 2024

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் - இரு பெண்களுக்கு ஏற்பட்ட கதி

Chithra / Oct 25th 2024, 11:44 am
image

Advertisement


பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து உள்நுழைந்த, முகமூடி அணிந்த இனந்தெரியாத மூவர் அங்கிருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை - உரன்னகொடவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு பெண்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காயமடைந்த இரு பெண்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு பெண்களினதும் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் - இரு பெண்களுக்கு ஏற்பட்ட கதி பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து உள்நுழைந்த, முகமூடி அணிந்த இனந்தெரியாத மூவர் அங்கிருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.பாணந்துறை - உரன்னகொடவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு பெண்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.காயமடைந்த இரு பெண்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த இரு பெண்களினதும் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement