பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை மற்றும் தெமட்டகொடயைச் சேர்ந்த 24,25,40 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த 7 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் தற்போது உயிரிழந்த நிலையில், மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு இளைஞர்களை பலியெடுத்த பொரளை துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை மற்றும் தெமட்டகொடயைச் சேர்ந்த 24,25,40 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 7 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் தற்போது உயிரிழந்த நிலையில், மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.