ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இம்மாதம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செம்மணி மனித புதைகுழி விவகாரம், யுத்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்து அதன் உண்மைத்தன்மையை இலங்கைக்கு வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவேண்டும்.
இலங்கையில் நேரடியாக இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐந்து அமைப்புகள் கடந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜூன் 23 இல் இலங்கைக்கு விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இம்மாதம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.செம்மணி மனித புதைகுழி விவகாரம், யுத்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்து அதன் உண்மைத்தன்மையை இலங்கைக்கு வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவேண்டும்.இலங்கையில் நேரடியாக இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐந்து அமைப்புகள் கடந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.