• May 19 2024

மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம்..!! வவுனியாவில் சோகம்..!!!

Tamil nila / May 6th 2024, 10:33 pm
image

Advertisement

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார்.

 குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார். 

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே மரணமடைந்தவராவார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற  சிதம்பரபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.



மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம். வவுனியாவில் சோகம். வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே மரணமடைந்தவராவார்.இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற  சிதம்பரபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement