• Sep 29 2024

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய இனந்தெரியாத நபரால் பதற்றம் - ஒருவர் வைத்தியசாலையில்

Chithra / Jun 26th 2024, 10:41 am
image

Advertisement

  

நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் திருமணமானவர் என்பதுடன், 

குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது, ​​முகத்தை மறைத்து நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய இனந்தெரியாத நபரால் பதற்றம் - ஒருவர் வைத்தியசாலையில்   நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.காயமடைந்தவர் திருமணமானவர் என்பதுடன், குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது, ​​முகத்தை மறைத்து நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement