• Jun 08 2025

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, உப தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி!

Thansita / Jun 7th 2025, 10:45 am
image

ஈகை திருநாளாம் ஹஜ் பெருநாளில் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் உலவிற்கு காட்டித்தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக கடைப்பிடிக்க முஸ்லிம் சகோதரர்கள் முன்வர வேண்டும் என  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்   தமது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளதாவது –

இஸ்லாத்தின் ஜம்பெருங் கடமைகளுள் ஹஜ் மிகவும் முக்கியமானதொன்று. வசதி படைத்தவர்களுக்கு இது முதன்மையானதாகும். அந்த வகையில் புனித ஹஜ் கடமையினையினை நிறைவேற்ற சென்றுள்ள ஹாஜிகளின் ஹஜ்ஜினை இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிராத்த்திப்பது தான் பொருத்தமாகும்.

அதே போன்று இலங்கையிலும் சர்வதேசத்திலும் அல்லலுரும் முஸ்லிம்களுக்கு அந்த கஷ்டத்திலும், சோதனையிலும் இருந்து விடுபட எமது துஆக்களும் முக்கிமானது .

வல்ல நாயன் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிட இப்றாஹிம் நபிகள் (அலை) அவர்கள் பெரும் தியாகத்தை செய்து முழு உலகிற்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள் இந்த வேளையில் முழு உலகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது . இந்த சோதனைகளில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிட்டுவதற்கு இந்த நன்நாளில் நமது வழிபாடுகளில் பிரார்த்தனைகளில் ஈடுபாடு காட்ட எம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.

புனித இஸ்லாம் தெளிவாக காட்டியுள்ளது. அனைத்து மக்களுடன் இன மத வேறுபாடுகளின்றிசகோதர வாஞ்சையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறது.

இதற்கமைய அனைத்து சமூகங்களுடனும் சகோதரத்துடன் வாழ்ந்து எம் சமூகத்தின் உயர்வுக்காக பாடுபட இந்த நன்நாளில் முன்வரவேண்டும்.இந்த வகையில் எம்மிடையே எவ்வித சோதனைகள் வந்தாலும் சமூகத்தின் நலன்களை பாதிக்காத தூரநோக்குள்ள தீர்மானங்களேயே நாம் எடுக்க வேண்டும் எழுந்த மானத்தில் எடுக்கபடும் முடிவுகளும் உணர்ச்சியான கருத்துக்களும் மாத்திரம் எம் சமூகத்தின் முழு நலனையும் வென்றுவிட முடியாது என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பொறுமையை கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுடனான நல்லுறவுகளை கட்டிக்காத்து நம் நமூகத்தின் தேவைகளை புத்திசாதுரியமாக அடைந்து கொள்ள இந்த நன்நாளில் உறுதி பூணுவோமாக இந்த தியாக திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சசோகதரர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திருநாள் நம் அனைவரினதும் சந்தோச வாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டும் என வல்ல நாயனை பிராத்திக்கின்றேன்

முஸ்லிம்கள் கொண்டாடும் தியாகத் திருநாள் முன்மாதிரி மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் பற்றுருதியுடன் செயற்படுமாறும் ஹஜ் புகட்டும் பாடத்தை தமது வாழ்வில் ஏற்று நடக்குமாறும்   ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்  தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார்


ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, உப தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி ஈகை திருநாளாம் ஹஜ் பெருநாளில் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் உலவிற்கு காட்டித்தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக கடைப்பிடிக்க முஸ்லிம் சகோதரர்கள் முன்வர வேண்டும் என  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்   தமது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளதாவது –இஸ்லாத்தின் ஜம்பெருங் கடமைகளுள் ஹஜ் மிகவும் முக்கியமானதொன்று. வசதி படைத்தவர்களுக்கு இது முதன்மையானதாகும். அந்த வகையில் புனித ஹஜ் கடமையினையினை நிறைவேற்ற சென்றுள்ள ஹாஜிகளின் ஹஜ்ஜினை இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிராத்த்திப்பது தான் பொருத்தமாகும்.அதே போன்று இலங்கையிலும் சர்வதேசத்திலும் அல்லலுரும் முஸ்லிம்களுக்கு அந்த கஷ்டத்திலும், சோதனையிலும் இருந்து விடுபட எமது துஆக்களும் முக்கிமானது . வல்ல நாயன் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிட இப்றாஹிம் நபிகள் (அலை) அவர்கள் பெரும் தியாகத்தை செய்து முழு உலகிற்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள் இந்த வேளையில் முழு உலகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது . இந்த சோதனைகளில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிட்டுவதற்கு இந்த நன்நாளில் நமது வழிபாடுகளில் பிரார்த்தனைகளில் ஈடுபாடு காட்ட எம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.புனித இஸ்லாம் தெளிவாக காட்டியுள்ளது. அனைத்து மக்களுடன் இன மத வேறுபாடுகளின்றிசகோதர வாஞ்சையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறது. இதற்கமைய அனைத்து சமூகங்களுடனும் சகோதரத்துடன் வாழ்ந்து எம் சமூகத்தின் உயர்வுக்காக பாடுபட இந்த நன்நாளில் முன்வரவேண்டும்.இந்த வகையில் எம்மிடையே எவ்வித சோதனைகள் வந்தாலும் சமூகத்தின் நலன்களை பாதிக்காத தூரநோக்குள்ள தீர்மானங்களேயே நாம் எடுக்க வேண்டும் எழுந்த மானத்தில் எடுக்கபடும் முடிவுகளும் உணர்ச்சியான கருத்துக்களும் மாத்திரம் எம் சமூகத்தின் முழு நலனையும் வென்றுவிட முடியாது என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பொறுமையை கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுடனான நல்லுறவுகளை கட்டிக்காத்து நம் நமூகத்தின் தேவைகளை புத்திசாதுரியமாக அடைந்து கொள்ள இந்த நன்நாளில் உறுதி பூணுவோமாக இந்த தியாக திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சசோகதரர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திருநாள் நம் அனைவரினதும் சந்தோச வாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டும் என வல்ல நாயனை பிராத்திக்கின்றேன்முஸ்லிம்கள் கொண்டாடும் தியாகத் திருநாள் முன்மாதிரி மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் பற்றுருதியுடன் செயற்படுமாறும் ஹஜ் புகட்டும் பாடத்தை தமது வாழ்வில் ஏற்று நடக்குமாறும்   ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்  தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement