• May 01 2026

போதைப்பொருளுடன் கைதான பல்கலை மாணவன் - தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Chithra / Mar 12th 2026, 1:23 pm
image

 

கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்ச் 7 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சந்தேக நபரிடம் 85 கிராம் 260 மில்லி கிராம் ஹாஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லி கிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் ஹோகந்தரவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை நடத்த மார்ச் 12 ஆம் திகதி வரை ஐந்து நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.


போதைப்பொருளுடன் கைதான பல்கலை மாணவன் - தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு  கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்ச் 7 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சந்தேக நபரிடம் 85 கிராம் 260 மில்லி கிராம் ஹாஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லி கிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் ஹோகந்தரவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை நடத்த மார்ச் 12 ஆம் திகதி வரை ஐந்து நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement