• Apr 16 2026

அமெரிக்க - இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஈரான் முன்னாள் ஜனாதிபதி பலி!

Chithra / Mar 2nd 2026, 8:18 am
image


2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வடகிழக்கு தெஹ்ரானின் 'நர்மக்' (Narmak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளமையை ஈரானிய ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், அர்டபில் (Ardabil) மாகாணத்தின் ஆளுநராகவும், தெஹ்ரான் நகர மேயராகவும் பணியாற்றியிருந்தார். 


அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியால் அவர் 'வியூக ஆலோசனைச் சபையின்' உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


உச்சத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, ஈரானிய அரசியலில் மற்றுமொரு பலமிக்க ஆளுமையான அஹ்மதிநெஜாட் இவ்வாறு கொல்லப்பட்டமையானது, அந்நாட்டு ஆட்சியமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு பாரிய அடியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க - இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஈரான் முன்னாள் ஜனாதிபதி பலி 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வடகிழக்கு தெஹ்ரானின் 'நர்மக்' (Narmak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளமையை ஈரானிய ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், அர்டபில் (Ardabil) மாகாணத்தின் ஆளுநராகவும், தெஹ்ரான் நகர மேயராகவும் பணியாற்றியிருந்தார். அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியால் அவர் 'வியூக ஆலோசனைச் சபையின்' உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.உச்சத் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, ஈரானிய அரசியலில் மற்றுமொரு பலமிக்க ஆளுமையான அஹ்மதிநெஜாட் இவ்வாறு கொல்லப்பட்டமையானது, அந்நாட்டு ஆட்சியமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு பாரிய அடியாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement