• May 05 2024

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் 60 சதவீதமானோரின் வேலை வாய்ப்புகள் ஆபத்தில்..! IMF எச்சரிக்கை

IMF
Chithra / Jan 15th 2024, 11:20 am
image

Advertisement

 

செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு உலக நாடுகளிடையே சமதுவமின்மையை மோசமாக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 40 சதவீத தொழிற்துறைகளை பாதிக்குமெனவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், தற்போது மனிதர்களால் செயல்படுத்தப்படும் முக்கிய பணிகளைச் செய்யும் திறனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளமையினால்,

தொழிலாளர்களுக்கான தேவையும் எதிர்காலத்தில் குறைவடையலாம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் 60 சதவீதமானோரின் வேலை வாய்ப்புகள் ஆபத்தில். IMF எச்சரிக்கை  செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு உலக நாடுகளிடையே சமதுவமின்மையை மோசமாக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.இந்த தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 40 சதவீத தொழிற்துறைகளை பாதிக்குமெனவும் குறிப்பிடப்படுகிறது.அத்துடன், தற்போது மனிதர்களால் செயல்படுத்தப்படும் முக்கிய பணிகளைச் செய்யும் திறனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளமையினால்,தொழிலாளர்களுக்கான தேவையும் எதிர்காலத்தில் குறைவடையலாம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement