தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம்வருபவர் தான் வைகைப்புயல் வடிவேலு.
இந்நிலையில் நேற்றையதினம் வடிவேலுக்கு கெளரவ
டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி பிரபலங்களுடன் பல்வேறு படங்களில் நடித்தார்.
இடையே சில பிரச்சனைகளில் சிக்கி படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் மீம்ஸ்கள் மூலம் மக்களை அன்றாடம் சிரிக்கவைத்து வந்தார் வடிவேலு.
இதனால் வடிவேலுவுக்கான மவுசு மட்டும் இன்றுவரை குறையாமல் இருக்கின்றது.
தற்போது வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள வடிவேலு, சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் தற்போது நடித்துவருகிறார். முதல் பாகம் அளவுக்கு வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்று கூறப்படும் நிலையில் இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சமூகத்தின் உயரிய விருதான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு பொழுதுபோக்கு பிரிவின் கீழ் இந்த பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வைகைப்புயல் வடிவேலுக்கு கெளரவ டாக்டர் பட்டம். குவியும் வாழ்த்துகள்.SamugamMedia தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம்வருபவர் தான் வைகைப்புயல் வடிவேலு.இந்நிலையில் நேற்றையதினம் வடிவேலுக்கு கெளரவ
டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி பிரபலங்களுடன் பல்வேறு படங்களில் நடித்தார்.இடையே சில பிரச்சனைகளில் சிக்கி படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் மீம்ஸ்கள் மூலம் மக்களை அன்றாடம் சிரிக்கவைத்து வந்தார் வடிவேலு. இதனால் வடிவேலுவுக்கான மவுசு மட்டும் இன்றுவரை குறையாமல் இருக்கின்றது.தற்போது வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள வடிவேலு, சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் தற்போது நடித்துவருகிறார். முதல் பாகம் அளவுக்கு வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்று கூறப்படும் நிலையில் இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சமூகத்தின் உயரிய விருதான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு பொழுதுபோக்கு பிரிவின் கீழ் இந்த பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.