எமது ஆட்சிக் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்கக்க வேண்டும் வேலணை பிரதேசசபை தவிசாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் கன்னி அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கின்றது. அந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கின்றது.
அதனடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும். அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச் சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்படுப் போயின.
அதனடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காது இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்.அதேபோன்று ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுவதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு பேதமின்றி ஆதரவுகள் இருக்க வேண்டும்.
அத்துடன் வங்களாவடி கடைத் தொகுதியின் மேற்றளத்தை கட்டுதல்,பொது விளையாடு மைதானம் அமைத்தல், அதை சிறந்த பொதிமுறையுடன் முன்னெடுத்துச் செல்லல், சோலைவருவாய் திட்டத்தை வேலணையின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுத்தல், சுற்றுலா விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கல், வீதிச் சுற்று வட்டம் அமைத்தல், முக்கியஸ்தர்களின் நினைவு சிலைகள் அமைத்தல், வேலணை நுழைவாயில் வளைவு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து நிறைவுசெய்து கொள்ள இந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையுடன் முயற்சிக்கின்றேன் .- என்றார்.
எமது ஆட்சியில் வளமான சபையாக வேலணையை மாற்ற வேண்டும் - வேலணை பிரதேசசபை தவிசாளர் தெரிவிப்பு எமது ஆட்சிக் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்கக்க வேண்டும் வேலணை பிரதேசசபை தவிசாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் கன்னி அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கின்றது. அந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கின்றது.அதனடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும். அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச் சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்படுப் போயின.அதனடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காது இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்.அதேபோன்று ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுவதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு பேதமின்றி ஆதரவுகள் இருக்க வேண்டும்.அத்துடன் வங்களாவடி கடைத் தொகுதியின் மேற்றளத்தை கட்டுதல்,பொது விளையாடு மைதானம் அமைத்தல், அதை சிறந்த பொதிமுறையுடன் முன்னெடுத்துச் செல்லல், சோலைவருவாய் திட்டத்தை வேலணையின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுத்தல், சுற்றுலா விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கல், வீதிச் சுற்று வட்டம் அமைத்தல், முக்கியஸ்தர்களின் நினைவு சிலைகள் அமைத்தல், வேலணை நுழைவாயில் வளைவு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து நிறைவுசெய்து கொள்ள இந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையுடன் முயற்சிக்கின்றேன் .- என்றார்.