திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் தன்சல் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (23) மாவட்ட செயலகத்தின் முன்பாகவுள்ள கண்டி- திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்றது.
இதன் போது மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் தன்சலில் ஈடுபட்டனர்.
அத்துடன் வீதியால் சென்ற பயணிகள் இ பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தன்சல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்( காணி) எஸ்.சுதாகரன் ,பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.